Saturday, March 5, 2016

https://www.facebook.com/eelamranjanvot/videos/10156700333490637/

Wednesday, September 25, 2013

பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் சந்திரகாசு பேச்சு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் சந்திரகாசு பேச்சு


காரைக்கால், செப்.25– காரைக்கால் அம்மையார் மணிமண்டபத்தில், பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் காளிதாசன் தலைமை தாங்கினார். விழாவில் புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் சந்திரகாசு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:– முதல்–அமைச்சர் ரங்கசாமி புதுவை அரசு மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக ஏராளமான திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். இந்த அரசு ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்திற்கும், கல்விக்கும் முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகிறது. சிறந்த மாணவர்களை உருவாக்குபவர்கள் ஆசிரியர்களே. எனவே அந்த ஆசிரியர்களின் கோரிக்கைகளும் நிச்சயம் விரைந்து செயல்படுத்தப்படும். பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்ப அரசு திட்ட மிட்டுள்ளது. அதுபோன்று ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கோரிக்கையை நிறைவேற்றவும், ஊதிய முரண்பாடுகளைகளையவும் அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து காரைக்கால் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.எச்.நாஜிம், புதுச்சேரி மின்திறல் குழுமம் தலைவர் பி.ஆர்.சிவா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) மாரிமுத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். விழாவில் பெற்றோர் சங்க தலைவர் எல்.எஸ்.பி. சோழசிங்கராயர், தலைமை ஆசிரியர்கள் சங்கத் தலைவர் அசோக் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் பலரும் கலந்து கொண்டனர். முன்னதாக விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் ஆசிரியர் கூட்டமைப்பு தலைவர் கரிகாலன் வரவேற்க, முடிவில் பட்டதாரி ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் இளங்கோவன் நன்றி கூறினார்

விபூதி பூசுவது எதுக்கு..? சந்தனம்,குங்குமம் வைப்பது எதுக்கு..?


விபூதி பூசுவது எதுக்கு..? சந்தனம்,குங்குமம் வைப்பது எதுக்கு..? நம் உடலின் அனைத்து நாடி நரம்புகளும் மூளையுடன் இணைக்கப் பட்டுள்ளன. உடலின் அநேக நரம்புகள் நெற்றிப் பொட்டின் வழியாகச் செல்கின்றன. ஆகவே நெற்றிப் பகுதி அதிக உஷ்ணமாகவே இருக்கும். நம் அடிவயிற்றில் நெருப்பு சக்தியிருக்கிறது. ஆனால் அந்த சூட்டின் தாக்கம் அதிகமாக உணரப் படுவது நெற்றிப் பொட்டில்தான். அதனால்தான் காய்ச்சல் என்றால் நெற்றியில் கைவைத்து உஷ்ணத்தின் தன்மையை அறிகிறோம். வாகனங்க ளின் எஞ்சின் தொடர்ந்து இயங்கும்போது அதிகம் சூடாகும். இந்த சூட்டைக் குறைத்து எஞ்சினுக்கு அதிக ஆயுளைக் கொடுப்பது ரேடியேட்டர். அதுபோல நமது மூளையையும், அதை இணைக்கும் நரம்புகளையும் குளிரச் செய்வதே நாம் நெற்றியில் பூசும் சந்தனக்குழம்பு செய்யும் தலையாய கடமை. தலையில் ஏற்படும் வியர்வை, தலை மேல் விழும் பனித்துளிகள் மற்றும் தண்ணீர் போன்றவற்றின் சிறுபகுதி கெட்டிப்பட்டுத் தலைப்பகுதியில் தங்கிவிடும். இதனால் தலைவலி, தூக்கமின்மை ஏற்படும். இப்படிப்பட்ட கெட்ட நீரை உறிஞ்சி வெளியேற்றவே விபூதி தரிப்பதன் நோக்கம். நெற்றிப்பகுதி அதிக சூடாவதால் கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. கிருமித் தொற்றைத் தடுக்கவே மஞ்சள்; அதிலிருந்து தயாரிக்கப்படும் குங்குமம். குங்குமம், சந்தனம், விபூதி ஆகிய மூன்றும் சிறந்த கிருமிநாசினிகள். அதை மறந்து பெண்கள் இன்று மஞ்சள், குங்குமத்தை ஒதுக்கி வருகின்றனர். பெரும்பாலான பெண்கள் ஸ்டிக்கர் பொட்டையே நம்பியிருக்கிறார்கள். ஸ்டிக்கர் பொட்டு உடல்நலனுக்குக் கெடுதியே செய்யும். அதில் தடவியிருக்கும் ஒட்டும்பசை ரசாயனத்தால் ஆனது. இது நெற்றியில் எரிச்சலை ஏற்படுத்தும். மற்றும் சூரிய ஒளி நெற்றிப் பொட்டில் விழுவதைத் தடுத்துவிடும். கண் மற்றும் புருவங்களுக்கு ஸ்டிக்கர் பொட்டு ஆபத்தானது.